முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கையின் ஒவ்வொரு தேர்விலும், வெறும் புத்தக அறிவு மட்டுமே, நம்மை தேர்வு அடையச் செய்ய முடியுமா?

*அனுபவம்?*      வயதான பெண்மணி ஒருவர், கொஞ்சம் மாம்பழங்கள் வாங்குவதற்காக, ஒரு பழ வியாபாரியிடம் சென்றார். அந்த பெண்மணிக்கு கண்பார்வை மோசம். அவளுடைய கேட்கும் திறனும் கூட நன்றாக இல்லை. அவள் மிகவும் பலகீனமாக இருந்ததால், மெதுவாகவே நடந்து வந்து கொண்டு இருந்தாள்.   அந்த மாம்பழ வியாபாரி தொலைவிலேயே அவள் வருவதைப் பார்த்து விட்டார். அவர் நினைக்கலானார். “ஓ! இன்று ஒரு நல்ல வேட்டைதான். நான் என்னிடம் இருக்கும் அழுகிப்போன மாம்பழங்களை இந்த வயதான பெண்ணிடம் கட்டி விடுவேன். அவளுக்கு, எந்தவித வித்தியாசத்தையும் காண முடியாது.  அந்த வயதான பெண்மணி பழவியாபாரியை நெருங்கிய போது, அவர் கூறினார், “இன்றைக்கு மார்க்கெட்டில் இருப்பதிலேயே, இவைதான் புத்தம் புதிய, மிகச் சிறந்தவை. நீங்கள், உங்கள் கண்களை மூடிக் கொண்டே, எந்தப் பழத்தை வேண்டுமானாலும், தெரிவு செய்ய முடியும்.  ஆனால், அந்த வயதான பெண், சற்று வித்தியாசமான வேண்டுகோளை முன்வைத்தாள். அவள் வியாபாரியிடம் கூறினாள்,“இந்த புதிய பழங்கள் சட்னி செய்வதற்காக தேவைப் படுகிறது. அதற்காக எனக்கு, கொஞ்சம் அதிகமாக பழுத்த பழங்கள் வேண்டியதாக இ...

காபியா கப்பா?

கல்லூரியை விட்டு வெளியே வந்து, நெடுங்காலத்திற்குப் பிறகு, ஒரு பழைய குழுவினர் சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்; மிக நல்ல அளவில், பணம் சம்பாத்தியம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள், தங்களுக்கு விருப்பமான பேராசிரியர் ஒருவரது வீட்டில் சந்தித்துக் கொண்டார்கள்.    அந்த பேராசிரியர், அவர்களது வேலையைப் பற்றி கேட்கத் தொடங்கினார். மெதுவாக அந்த உரையாடல், அதிகரித்துக் கொண்டு செல்லும் போது மன அழுத்தம், மேலும் வாழ்க்கையில் உள்ள வேலையின் சுமை - இவற்றைப் பற்றியதாகச் சென்றது.  இந்த விஷயத்தில், அனைவருமே ஒரே விதமான கருத்தையே கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவருமே, பண விஷயத்தில் எந்த விதமான குறைபாடு ஏதும் இல்லாமல், வலுவாக இருந்த போதும், அவர்களது வாழ்க்கை, வழக்கமாக இருக்க வேண்டியது போல, வலிமையாகவோ, வேடிக்கையாகவோ இருக்கவில்லை.  அந்த பேராசிரியர் அவர்களை மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டு இருந்தார். அவர் திடீரென்று எழுந்து சென்றார்; சிறிது நேரத்திற்குப் பிறகு, சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார்; அவர் கூறினார்,“ எனது அ...

நான் யார்?

♥️ *கதை-320*♥️ *“உண்மையில் நாம் யார் என்பதை நமக்குள்ளாகவே நம்மால் அடையாளம் காண முடிகிறதா? ”* ஒரு பேரரசரின் மகன் ஒருவன் மோசமான நபர்களின் தொடர்பில் சிக்கி கெட்டுப் போய் விட்டான். அவனுடைய அப்பா, மிகவும் வருத்தம் கொண்டார். ஒரு நாள், அப்பா மிகவும் கோபத்திற்கு ஆளாகி, ஆத்திரம் அடைந்து ,“ இனிமேலும் இதேபோல கெட்ட நபர்களோடு இருந்தால் உன்னை அரண்மனையை விட்டு வெளியேற்றி விடுவேன். உன்னை நீயாகவே சரிசெய்து கொள்ள வேண்டும்; இல்லை என்றால், என்னுடைய அரண்மனையை விட்டு கிளம்பி விடு.” என்று கூறினார்.  அந்த பேரரசர், அந்த இளவரசர் உண்மையிலேயே அரண்மனையை விட்டுப் போய் விடுவார் என்று நினைக்கவில்லை.ஆனால் இளவரசன், அவனுடைய கோபத்தினால் அரண்மனையை விட்டு கிளம்பி போய் விட்டான்.  அந்தப் பேரரசரின் மகனும், அந்த பேரரசரைப் போன்றே, பிடிவாதமான குணம் உடையவன். அந்த அப்பா அவனை நிறையவே தேடினார். ஆனால் அவனைக் கண்டு பிடிக்க முடியவே இல்லை. வருடங்கள் கடந்தன.     அவருக்கு அவன் ஒரே மகன். இந்த முழுமையான சாம்ராஜ்யமும் அவனுக்கே உரியது. அந்த அப்பா, மிக அதிக அளவு வருத்தமடைந்தார். அது ஒரு து...

வைகறை வசந்தம்

விஞ்ஞானத்தில் நிலையாற்றல்  (Potential Energy) மற்றும்  இயங்காற்றல் ( Kinetic Energy) என்று இருக்கிறது. ஆகவே மனோபலம் (நிலையாற்றல் போன்ற)  உள்ளுறை சக்தி, அதை உபயோகப்படுத்தும் போது, அது இயங்காற்றலாக மாறுகிறது.  நாம் என்ன செய்கின்றோம் என்றால் நாம் எந்த அளவுக்கு சுபாவங்களுக்கு அடி பணிகிறோமோ அந்த அளவுக்கு மனோபலம் அதிக சக்தியைப் பெறுவதற்குப் பதிலாக சுபாவங்கள் அதிக சக்தியைப் பெறுகின்றன. ஆகவே, மனோபலத்தின் சக்தி, சுபாவங்களுக்கு எடுத்துக் கொடுக்கப்படுகின்றது.  ஆகவே, சுபாவங்களின் சக்தியை நீக்கினால்தான், நாம் மீண்டும் மனோபலத்தின் சக்தியைப் பெறுவோம். அந்த சுபாவங்களை விலக்குவது அல்லது அழிப்பதுதான் நம்முடைய சுத்திகரிப்புப் பயிற்சியாகும். அவைகளை நீங்கள் அழிக்கிறீர்கள் - ஒரு  சிலேட்டை (Slate) அழிப்பது போல. மனோபலத்திற்கு அதன் ஆரம்ப சக்தி மீண்டும் வந்து விடுகின்றது. *  🙏🏻 

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

ஒரு இலட்சியத்தை அமைத்துக் கொண்ட பிறகு, அதை அடைவதற்கு மிகவும் முக்கியமானது எது?

*465 நாட்கள் ✈️HFN கதை🌍 குழுவினரோடு.* *‘முழுமையான தேடலர்‘*  ஒரு முறை, ஒரு குருவானவர் அவருடைய சீடர்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்தார். அவர் கூறினார், அன்பானவர்களே, முழுமையான தேடலர்களாக மாறுங்கள். அரை குறையாகவும், பயிற்சி முற்றுப் பெறாத தேடலர்களாகவும் இருந்து விடாதீர்கள்.“ முழுமையான மற்றும் அரைகுறையான சீடர்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்த பிறகு, அங்கே, ஒரு புதிய சீடருக்கு மிகவும் தீவிர விருப்பத்தால் அவரது மனதில் கேள்வி ஒன்று உதித்தது.  அவரால் விடை காண முடியாத நிலை. ஆகவே குருவிடம் கேட்டார், “குருஜி, எவ்வாறு முழுமையான தேடலராக மாறுவது? ”  குருஜி புன்சிரிப்போடு கூறினார்,“ மகனே, ஒவ்வொரு கிராமத்திலும் இனிப்பு செய்பவர் என ஒருவர் இருப்பதுண்டு; ஒவ்வொரு நாளும், அந்த இனிப்பு செய்பவர் வழக்கமாக வெவ்வேறு வகையிலான இனிப்புக்களை செய்வார்; ஒவ்வொன்றும் இன்னொன்றை விட மிகவும் தித்திப்பாக இருக்கும். அவர், அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களிலும் கூட, மிகவும் பிரபலமாகத் திகழ்ந்தார். மேலும் மக்கள் அடிக்கடி வந்து இவரது இனிப்புக்களை வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள்.  ஒரு நாள் அந்த இனிப்...

வாழ்க்கை கணக்கு

*📚இன்றைய சிந்தனை.* *……………………………………………* *‘’...’’* *…………………………………………..* கணிதம் இந்த உலகத்தில் அக்காலத்திலும் இக்காலத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அறிவு சார்ந்த எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் கணிதம் முக்கியப் பங்கு வகிக்கிறது.  இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கும் நுணுக்கத்திற்கும் கணிதமே முக்கிய வழி காட்டுதலாகத் திகழ்கிறது. கணிதம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே உரியதல்ல. அது நம் அனைவருக்கும் அவசியமானது.  ஷாப்பிங் செய்கையில், வீட்டை அலங்கரிக்கையில் அல்லது தினசரி வானிலை அறிக்கையைக் கேட்பதில் நீங்கள் கணிதத்தை உபயோகிக்கிறீர்கள் அல்லது அவற்றில் இருந்து பயன் அடைகிறீர்கள். கணிதம் உப்பு சப்பில்லாதது, அன்றாட வாழ்க்கைக்கு உதவாதது என்று அநேகர் நினைக்கின்றனர். நீங்களும் அப்படித் தான் நினைக்கிறீர்களா? கணிதம் எந்தளவுக்கு உபயோகமானதாக, எளியதாக, கவர்ச்சியானதாக இருக்க முடியும் என்பதை இப்போது ஆராயலாம். "கணிதம் என்பது பொதுவானதொரு மொழியாகும்" நாம் அன்றாட வாழ்வில் சந்திப்பவர்களின் நடவடிக்கைகளைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் ஏதோ ஒன்றில் திறை...

கோ1 தமிழ் புதிய இலச்சினை

  Co1 Tamil Logo

இளமையான தோற்றத்தில் தனுஷ் இட்லி கடை திரைப்படத்திற்காக

ராம்கியுடன் தளபதி விஜய்