முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காபியா கப்பா?

கல்லூரியை விட்டு வெளியே வந்து, நெடுங்காலத்திற்குப் பிறகு, ஒரு பழைய குழுவினர் சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்; மிக நல்ல அளவில், பணம் சம்பாத்தியம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள், தங்களுக்கு விருப்பமான பேராசிரியர் ஒருவரது வீட்டில் சந்தித்துக் கொண்டார்கள்.  

 அந்த பேராசிரியர், அவர்களது வேலையைப் பற்றி கேட்கத் தொடங்கினார். மெதுவாக அந்த உரையாடல், அதிகரித்துக் கொண்டு செல்லும் போது மன அழுத்தம், மேலும் வாழ்க்கையில் உள்ள வேலையின் சுமை - இவற்றைப் பற்றியதாகச் சென்றது.

 இந்த விஷயத்தில், அனைவருமே ஒரே விதமான கருத்தையே கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவருமே, பண விஷயத்தில் எந்த விதமான குறைபாடு ஏதும் இல்லாமல், வலுவாக இருந்த போதும், அவர்களது வாழ்க்கை, வழக்கமாக இருக்க வேண்டியது போல, வலிமையாகவோ, வேடிக்கையாகவோ இருக்கவில்லை.

 அந்த பேராசிரியர் அவர்களை மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டு இருந்தார். அவர் திடீரென்று எழுந்து சென்றார்; சிறிது நேரத்திற்குப் பிறகு, சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார்; அவர் கூறினார்,“ எனது அருமை, மாணவர்களே, நான் உங்களுக்காக, சூடாக காபி தயார் செய்து விட்டேன். ஆனால், தயவு செய்து, நீங்கள் அனைவரும் சமையல் அறைக்குச் சென்று, உங்களுக்கான கப்புகளை எடுத்து வாருங்கள்.”

 அந்த மாணவர்கள், உடனே, உள்ளே சென்றார்கள்; அங்கே பல்வேறு வகையான கப்புக்கள் அங்கே வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று மிகச் சிறந்த கப்பை எடுக்கத் தொடங்கினார்கள்.

 சில பேர் அழகான பளிங்கு கப்புகளை எடுத்தார்கள். சில பேர் பீங்கான் கப்புகளையும், மேலும் சில பேர் கண்ணாடிக் கப்புகளையும் எடுத்தார்கள்.

 அனைவரும், தங்கள் கைகளில் காபியுடன் இருக்கும் போது, அந்த பேராசிரியர் கூறினார்,“ நீங்கள் அனைவருமே, சிறந்த தோற்றமுடையதும், விலை மிக்கதுமான கப்புக்களை தேர்ந்தெடுப்பதில், உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள்; மேலும் சாதாரணமான கப்புகளை நோக்கி உங்கள் கவனம் செல்லவும் இல்லை. ஒரு பக்கம் பார்த்தால், இது சாதாரணமானதுதான்; உங்களுக்கான மிகச் சிறந்ததை எடுத்தது என்பது! இன்னொரு பக்கம் பார்த்தால், இது நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகளையும், மேலும் மன அழுத்தத்தையும் கொண்டு வருகிறது. ஒன்று உறுதி, அதாவது, அந்த கப்பானது காபியின் தன்மையை மாற்றப் போவது இல்லை. அது வெறுமனே, நீங்கள் காபியைக் குடிக்கப் பயன்படும் ஒரு வழிமுறை, மட்டும்தான்.

 அடிப்படையில், உங்களுக்குத் தேவையானது என்னவென்றால், வெறுமனே காபி மட்டுமேதான்; கப் அல்ல. ஆனால், இன்னும் கூட, நீங்கள் அனைவரும் மிகச் சிறந்த கப்புடன் வந்த பிறகும் கூட, அடுத்தவர்களின் கப்பைப் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

 இப்போது, இதனைக் கவனமாக கவனியுங்கள். ……..

 “ இந்த வாழ்க்கையும் காபி மாதிரிதான். நமது வேலைகள், பணம், பதவிகள் இவை யாவும் கப்பைப் போன்றவைகள். இவை எல்லாமே வழிகளே தவிர, அவையே வாழ்க்கை அல்ல! நம்மிடம் இருக்கிற கப், நமது வாழ்க்கையை விவரிக்கவோ அல்லது நமது வாழ்க்கையை மாற்றவோ செய்து விடாது. அதனால்தான் காபியைப் பற்றி கவலைப் படுங்கள்; கப்பைப் பற்றி அல்ல.” என்கிறேன்.

 எல்லாப் பொருட்களிலும், மிகச் சிறந்ததை வைத்திருப்பவர்கள்தான் மிகவும் மகிழ்ச்சியானவர்களாக இந்த உலகத்தில் இருக்கிறார்கள், என்பதல்ல. தங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்துபவர்களே மிகவும் மகிழ்ச்சியுடையவர்களாகவும், ஆனந்தத்தோடு முழுமையான வாழ்க்கையை வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.  

 “ புன் சிரிப்பு, எளிமை மேலும் இதய பூர்வமான அன்பு–இவை நம் வாழ்க்கையை முழுவதுமாக குதூகலம் அடையச் செய்ய முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...