முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கையின் ஒவ்வொரு தேர்விலும், வெறும் புத்தக அறிவு மட்டுமே, நம்மை தேர்வு அடையச் செய்ய முடியுமா?





*அனுபவம்?*
  

  வயதான பெண்மணி ஒருவர், கொஞ்சம் மாம்பழங்கள் வாங்குவதற்காக, ஒரு பழ வியாபாரியிடம் சென்றார். அந்த பெண்மணிக்கு கண்பார்வை மோசம். அவளுடைய கேட்கும் திறனும் கூட நன்றாக இல்லை. அவள் மிகவும் பலகீனமாக இருந்ததால், மெதுவாகவே நடந்து வந்து கொண்டு இருந்தாள். 

 அந்த மாம்பழ வியாபாரி தொலைவிலேயே அவள் வருவதைப் பார்த்து விட்டார். அவர் நினைக்கலானார். “ஓ! இன்று ஒரு நல்ல வேட்டைதான். நான் என்னிடம் இருக்கும் அழுகிப்போன மாம்பழங்களை இந்த வயதான பெண்ணிடம் கட்டி விடுவேன். அவளுக்கு, எந்தவித வித்தியாசத்தையும் காண முடியாது.

 அந்த வயதான பெண்மணி பழவியாபாரியை நெருங்கிய போது, அவர் கூறினார், “இன்றைக்கு மார்க்கெட்டில் இருப்பதிலேயே, இவைதான் புத்தம் புதிய, மிகச் சிறந்தவை. நீங்கள், உங்கள் கண்களை மூடிக் கொண்டே, எந்தப் பழத்தை வேண்டுமானாலும், தெரிவு செய்ய முடியும்.

 ஆனால், அந்த வயதான பெண், சற்று வித்தியாசமான வேண்டுகோளை முன்வைத்தாள். அவள் வியாபாரியிடம் கூறினாள்,“இந்த புதிய பழங்கள் சட்னி செய்வதற்காக தேவைப் படுகிறது. அதற்காக எனக்கு, கொஞ்சம் அதிகமாக பழுத்த பழங்கள் வேண்டியதாக இருக்கிறது. அவை, சிறிது மென்மையாகவும் இருக்க வேண்டும். எனக்கு கண் பார்வை கொஞ்சம் குறைவு; நீங்கள் அந்த மாதிரியான பழங்களை எனக்காக ஒதுக்கி வைக்க முடியுமா?

 அந்த பழ வியாபாரி, சற்று அதிகப்படியாகவே மகிழ்ச்சி அடைந்தார். ஏனென்றால், இப்படி ஒருபோதும் நடக்காது. அதாவது, யாராவது உன்னிடம் வந்து, கெட்டுப் போன பழங்களை வாங்கிப் போகிறேன் என்று வருவார்களா!

 அவர் மிகவும் கவனமாக, அதிகப்படியாக பழுத்த பழங்களைப் பிரித்தெடுத்தார். சிறிது மென்மையான பழங்களை, அவற்றை, வேறு ஒரு தனி குவியலாக ஆக்க செய்தார். அந்த வயதான பெண்ணிடம் கூறினார், “இப்போது, நீங்கள் இந்தப் பக்கமாக இருக்கும் குவியலில் இருந்து, உங்களுக்கு விருப்பமாக, நிறையவே பழங்களை எடுத்துக் கொள்ள முடியும்! “

 அந்த வயதான பெண்மணி அவருக்கு நன்றி கூறினாள், இனிமையான புன்சிரிப்போடு! பிறகு அவள் அடுத்த குவியலுக்குத் திரும்பினாள்; அது புதியதாக, முறையாகப் பழுத்த மாம்பழங்களைக் கொண்டிருந்தது. அவள் உண்மையாக விரும்பிய மாம்பழங்களை, அதிலிருந்து பொறுக்கி எடுத்தாள்.

 அந்த பழவியாபாரியின் கண்கள் அகன்று விரிந்தன, அவருக்கு ஒரே வியப்பு! அவர்தான், இந்தப் பரீட்சையில் தோற்றுப் போனவர்; இந்தக் கணக்கில் ஏமாந்து விட்டதை உணர்ந்தார். அதாவது, வயதான அனுபவம் வாய்ந்த மக்கள் அனைவரும், சாதாரண உடல் உணர்வுகளை மட்டுமே, முழுவதுமாக சார்ந்து இருக்க மாட்டார்கள். அவர்களது அனுபவமும், நுண்ணறிவும், அவர்களை எந்த ஒன்றையும் சரியாக அடையாளம் கண்டுகொள்ள உதவுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...