முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நவம்பர் 20 - சர்வதேச குழந்தைகள் உரிமைகள் தினம்


*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
* International Child Rights Day*
     
     ஐ.நா-வின் யுனிசெஃப் எனும் குழந்தைகள் நல அமைப்பு நவம்பர் 20, உலகக் குழந்தைகள் உரிமைகள் தினம் என அறிவித்துள்ளது. குழந்தைகள் நலனுக்காகக் கருத்தரங்குகள் தொடங்கி, பரப்புரை எனப் பல்வேறு நிலைகளில் உலகத் தலைவர்களுக்கு, குழந்தைகள் நலம் குறித்து கொள்கை முடிவுகள் எடுக்கச் சொல்லி வலியுறுத்துவது வரை பலவற்றைச் செய்கிறது. 

    உலக மக்களிடையே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு நிகரான அனைத்து வாழ்வியல் உரிமைகளும் சட்டமாக்கப்பட வேண்டும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து #GoBlue என்ற பிரசாரத்தை நடத்திவருகிறது. 

   நீல நிறத்தைக் குழந்தைகள் உரிமை காப்பதற்காக அடையாளப்படுத்துகிறது இந்த அமைப்பு. யுனிசெஃப்புக்கு இந்தியாவின் நல்லெண்ணத் தூதர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 

    சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, #GoBlue பிரசாரத்துக்காக, ராஷ்ட்ரபதி பவன், ஐ.நா சபை கட்டடம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் போன்ற இந்தியாவின் முக்கியக் கட்டடங்கள் நீல நிறத்தில் ஒளிரப்போகின்றன. 

   யுனிசெஃப் முதல் முறையாக 14 வயதான குழந்தை நட்சத்திரம் மில்லி பாபி பிரவுனை அதன் நல்லெண்ண தூதராக நியமித்திருக்கிறது.

     இதைத் தாண்டி உலகில் ஏறத்தாழ 85 நாடுகளில் குழந்தைகள் தினம் என்று வெவ்வேறு தினங்களில் பிரத்தியேகமாகக் கொண்டாடப் படுகின்றது. அப்படி உலக நாடுகளில் எல்லாம் குழந்தைகள் தினம் என்று..? எதற்காக, எப்படிக் கொண்டாடப்படுகிறது, என்ன சுவாரஸ்யங்கள் இருக்கின்றன என்று சற்று ஆராய்ந்தேன். என் ஆராய்ச்சி முடிவுகள் பின்வருமாறு: 

   இந்தியா: நவம்பர் 14, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் என்றாலே அனைவரும் நினைவலை ரயிலேறி பள்ளி நாள்களுக்குச் சென்றுவிடுகிறோம். அன்று மட்டும் சீருடை தவிர்த்து கலர் உடை அணியலாம், பள்ளியில் இனிப்பு வழங்கப்படும். நேரு மாமா புகழ் பாடும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும், சில பள்ளிகளில் எல்லாம் ஆசிரியர்கள் ஆடிப் பாடி கலைநிகழ்ச்சிகள் நடத்துவர். பெரிதாக வகுப்புகள் நடக்காது, வாழ்த்து ஒலிகளால் அன்றைய தினம் முழுவதும் நிறைந்திருக்கும், நண்பர்களுக்குள் யார் முதலில் வாழ்த்துவது என்ற போட்டி நடக்கும். இப்படிப் பல்வேறு நினைவுகளுடன், அனைவரின் உள்ளே இருக்கும் குழந்தைத் தன்மையை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள். இன்று `ஹாப்பி சில்ட்ரன்ஸ் டே’ என்ற வாட்ஸ்அப் குறுஞ்செய்தியுடன், இந்த நாள் வழக்கமாகக் கடந்துவிடுகிறது. இப்போதெல்லாம் குழந்தைகள்கூட அந்த நாளைப் பெரிதாகக் கொண்டாடுவதில்லை. காரணம், அவர்கள் வாழ்க்கைக்குள் யூடியூப் வீடியோக்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், மொபைல் கேம் இப்படி பலவிஷயங்கள் நிறைந்திருக்கின்றன. சில்ட்ரன்ஸ் டே அளிக்கும் சிறிய சந்தோஷங்களை எல்லாம் அவர்கள் பெரிதாய் ரசிப்பதில்லை.

    பல்கேரியா: ஜூன் மாதம் 1-ம் தேதி இங்கு குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு விழிப்பு உணர்வுக்காகக் குழந்தைகள் தினத்தன்று வாகனங்களில் விளக்குகளைப் பகலிலும் எரியவிட்டுக்கொண்டே வண்டி ஓட்டுவது இங்கு வழக்கம்.

     டொக்லியு தீவுகள்: அக்டோபர் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தன்று, இங்கு குழந்தைகள் வெள்ளை உடை அணிவது வழக்கம். மற்றொரு சிறப்பம்சமாக அன்று முழுவதும் குழந்தைகளுக்குப் பெற்றோர் சேவை செய்து மகிழ்கின்றனர். "அப்பா அதை எடுங்க, அம்மா இதைப் பிடிங்க" என்று பெற்றோரை வேலை வாங்குவது குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான்.

      சிலி: பொம்மைகள் வாங்குவதற்கு என்றே ஒரு நாள் இருந்தால் எப்படி இருக்கும்? சிலியில் குழந்தைகள் தினத்தன்று குட்டீஸ் விரும்பும் பொம்மைகள் வாங்கித் தருவதையே கொண்டாட்டமாக வைத்திருக்கின்றனர். இங்கு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது குழந்தைகள் தினம்.

    கனடா: நவம்பர் 20, குழந்தைகள் நலத்தைப் பற்றிய சட்டங்களைப் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் அவர்கள் முன்னேற்றத்துக்கு உகந்த சட்ட வரைவுகளை அறிமுகம் செய்யும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. 

     எகிப்து: நவம்பர் 20, எகிப்தில் இது பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது, தெருக்களில் எல்லாம் அலங்கரிக்கப்பட்டு, ஆங்காங்கே நாட்டுப்புற நடனங்கள், காலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் என விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

      ஜப்பான்: இதிலும் ஜப்பானியர்கள் வித்தியாசம்தான். ஜப்பானில் மட்டும் இரண்டு குழந்தைகள் தினங்கள் கொண்டாடப்படுகின்றன. மார்ச் 3, பெண் குழந்தைகளுக்காகவும் மே 5, ஆண் குழந்தைகளுக்காகவும் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகள் தினத்தன்று மக்கள் ஹெய்ன் வகை பொம்மைகளால் வீடுகளை அலங்கரித்து கொண்டாடுகின்றனர். ஆண் குழந்தைகள் தினத்தன்று மீன் வடிவப் பட்டங்களைப் பறக்க விட்டு கொண்டாடுகின்றனர்.

      மெக்ஸிகோ: மெக்ஸிகோவில் ஏப்ரல் 30-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பள்ளிகளில் எல்லாம் ஒரே விளையாட்டு மயமாகவே இருக்கும். மேலும் மெக்ஸிகோவின் சிறப்பு குழந்தைகள் தினத்தன்று மிக அடர்த்தியான வண்ணங்களில் குழந்தைகள் ஆடை அணிவது ஆகும். வசந்த காலத்தை, புது தொடக்கத்தை அனுசரிப்பதற்காக இது செய்யப்படுகிறது.

       பராகுவே: குழந்தைகள் தினத்தைப் பொறுத்தவரை மிக வித்தியாசமாக, கொண்டாட்டமாக இல்லாமல் நினைவு அஞ்சலி செலுத்தும் நாளாக இங்கு கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 16-ம் தேதி, 'அகோஸ்டா நு' (Battle of Acosta Ñu) என்னும் போரின்போது 20,000 வீரர்களை எதிர்த்து 6 - 15 வயது சிறுவர்கள் 3,500 பேர் போரிட்டதை நினைவுகூரும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

       பெரு: இங்குக் குழந்தைகளின் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது வர்த்தக நிறுவனங்கள். அனைத்துக் கடைகளிலும் நமது ஆடி மாதம்போல சிறப்புச் சலுகைகளும் தள்ளுபடி விலைகளும் இன்று கொடுக்கப்படுகிறது. பெரு நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகள் தினம் ஷாப்பிங் தினமாகவே கொண்டாடப்படுகிறது என்று சொல்லலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...