முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சமீபத்திய இடுகைகள்

நவம்பர் 20 - சர்வதேச குழந்தைகள் உரிமைகள் தினம்

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* * International Child Rights Day*            ஐ.நா-வின் யுனிசெஃப் எனும் குழந்தைகள் நல அமைப்பு நவம்பர் 20, உலகக் குழந்தைகள் உரிமைகள் தினம் என அறிவித்துள்ளது. குழந்தைகள் நலனுக்காகக் கருத்தரங்குகள் தொடங்கி, பரப்புரை எனப் பல்வேறு நிலைகளில் உலகத் தலைவர்களுக்கு, குழந்தைகள் நலம் குறித்து கொள்கை முடிவுகள் எடுக்கச் சொல்லி வலியுறுத்துவது வரை பலவற்றைச் செய்கிறது.      உலக மக்களிடையே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு நிகரான அனைத்து வாழ்வியல் உரிமைகளும் சட்டமாக்கப்பட வேண்டும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து #GoBlue என்ற பிரசாரத்தை நடத்திவருகிறது.     நீல நிறத்தைக் குழந்தைகள் உரிமை காப்பதற்காக அடையாளப்படுத்துகிறது இந்த அமைப்பு. யுனிசெஃப்புக்கு இந்தியாவின் நல்லெண்ணத் தூதர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.      சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, #GoBlue பிரசாரத்துக்காக, ராஷ்ட்ரபதி பவன், ஐ.நா சபை கட்டடம், மும்பை சத்ரபதி சிவாஜ...

உலக ஆசிரியர் தினம் - அக்டோபர் 5

ஆசிரியன் என்பவன் மாணவச் சமூகத்தை உருவாக்குபவன் அல்லன் மாறாக உயிரூட்டுபவன். ஒரு சிறந்த ஆசிரியனின் பண்புகளை, குணங்களை பார்க்கும் மாணவர்களின் மனதில் அப்படியே பதியும். எனவே ஆசிரியன் என்பவன்  தமது மாணவர்களின் காலக் கண்ணாடியாவான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஓர் ஆசிரியனுக்கு இருக்கிறது. வெறும் மாணவனாக பள்ளிக்கு வரும் அவனுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவனை சாதனையாளனாக ஆக்குபவன் ஆசிரியன். "எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய்  விளங்குபவன் ஆசிரியன். மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள்... வேறு எந்தப் பணிக்கும் கிடைக்காத பெருமை... ஓர் ஆசிரியனுக்கு உள்ளது என்பதற்கு... இந்தப் பழமொழியே சாட்சி. ஆசிரியன் என்பவன் கற்பிப்பவன் மட்டுமல்லன், என்றென்றும் கற்பவனும்கூட.

சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்

1 திருகுடந்தை ஊழ்வினை பாவம் விலக 2 திருச்சிராப்பள்ளி வினை அகல 3 திருநள்ளாறு கஷ்டங்கள் விலக 4 திருவிடைமருதூர் மனநோய் விலக 5 திருவாவடுதுறை ஞானம் பெற 6 திருவாஞ்சியம் தீரா துயர் நீங்க 7 திருமறைக்காடு கல்வி மேன்மை உண்டாக 8 திருத்தில்லை முக்தி வேண்ட 9 திருநாவலூர் மரண பயம் விலக 10 திருவாரூர் குல சாபம் விலக 11 திருநாகை (நாகப்பட்டினம் ) சர்ப்ப தோஷம் விலக 12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) முக்தி வேண்ட 13 திருவண்ணாமலை நினைத்த காரியம் நடக்க 14 திருநெல்லிக்கா முன்வினை விலக 15 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய 16 திருகருக்காவூர் கர்ப்ப சிதைவு தோஷம் விலக 17 திரு வைத்தீஸ்வரன் கோவில் நோய் விலக 18 திருகோடிக்கரை பிரம்ம தோஷம் விலக 19 திருக்களம்பூர் சுபிட்சம் ஏற்பட 20 திருக்குடவாயில் ( குடவாசல் ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய 21 திருசிக்கல் ( சிக்கல் ) துணிவு கிடைக்க 22 திருச்செங்காட்டங்குடி கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக 23 திருக்கண்டீச்சுரம் நோய் விலக , தீராத புண் ஆற 24 திருக்கருக்குடி ( மருதாநல்லூர் ) குடும்ப கவலை விலக 25 திருக்கருவேலி ( கருவேலி ) குழந்தை ப...

ஆகஸ்ட் 13-உலக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினம்

 இன்று. உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த, இந்தியாவில் ஆண்டுதோறும், ஆகஸ்ட் 13ம் தேதி உடலுறுப்பு தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. நம் நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 2 லட்சம் பேர் விபத்தில் சிக்கி மூளைச்சாவுக்கு ஆளாகி இறக்கிறார்கள். இவர்களது கிட்னி, இருதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவை வீணாக மண்ணுக்குப் போகிறது.  மண்ணுக்கு வீணாகச் செல்லும் உறுப்புகளை வாழக் காத்திருக்கும் மனிதருக்கு வழங்கினால், தானம் பெறுபவரும் வாழ்வார், தானம் கொடுத்தவரும் மற்றொரு உயிரில் வாழ்வார். ஆனால் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படாமல் வீணாகிறது.  மூளைச் சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க உறவினர்கள் முன் வர வேண்டும். ஆனால் 131 கோடி மக்கட்தொகை கொண்ட இந்திய மக்களில், வெறும் 1 சதவீதத்தினர் மட்டுமே உடலுறுப்பு தானம் செய்வதாக, மருத்துவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.  மேற்கத்திய நாடுகளில் 70 முதல் 80 சதவீதத்தினர் உடலுறுப்புகளை தானம் செய்யும் நிலையில், இந்தியாவில் அது வெறும் 1 ச...

ஆகஸ்ட் 12 - உலக யானைகள் தினம் - World Elephant Day

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன.  இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.12 ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.

சிவனும், விஷ்ணுவும் ஒன்றெனக் காட்சி தந்த அதிசயம்! ஆடி தபசு திருநாள் சிறப்பு!

* *ஆகஸ்ட் 7, ஆடி தபசு* தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் பதினோராம் நூற்றாண்டில் உக்கிரபாண்டிய மகாராஜாவால் கட்டப்பட்டது. அந்தக் காலத்தில் சங்கரன்கோவில் பகுதியை உக்கிரபாண்டிய மகாராஜா ஆட்சி செய்து வந்தார். அவர் சைவ பக்தர். அடிக்கடி மதுரைக்குச் சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிப்பது அவரது வழக்கம். அவர் படை வீரர்கள் புடைசூழ யானையில் பயணித்து மதுரையை அடைவாராம். மீனாட்சி, சுந்தரேஸ்வரரை தரிசித்து விட்டு அதே வழியில் அவர் திரும்புவாராம். ஒரு சமயம் அவர் மதுரைக்குச் செல்லும்போது இடையில் பெருங்கோட்டூர் என்னும் இடத்தில் அவரது பட்டத்து யானை தனது தந்தத்தால் மண்ணைக் குத்தி கீழே விழுந்தது. இதனால் மன்னர் செய்வது அறியாது திகைத்தார். அப்போது புன்னை வன காவல்காரரான மணிகிரிவன் என்பவர் அவர் முன் தோன்றி, ‘அரசே இங்கே புற்றொன்றுடைய புன்னை வனம் உள்ளது’ என்றார். இதையடுத்து அந்த இடத்தை தோண்டும்போது பாம்புகள் சுற்றிக் கிடக்க, சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. இதனால் வியப்பின் எல்லைக்கே சென்ற மன்னர் அரண்மனைக்கு திரும்பி விட்டா...