முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயத்தை தைரியமாக எதிர்கொள்ள உதவும் 8 வழிமுறைகள்!

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான பயம் இருக்கும். அது மனிதருக்கு மனிதர் மாறுபடும். பயத்தை எதிர்கொள்வதும் சமாளிப்பதும் ஒரு கலையாகும். அச்சத்தை எதிர்கொண்டு வெற்றிபெற உதவும் எட்டு வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். 

1. அச்சங்களை அடையாளம் காணுதல்; 

எந்தெந்த விஷயங்கள் அச்சத்தை தருகின்றன என்பதைப் பற்றிய புரிதல் ஒருவருக்கு மிகவும் அவசியம். ஒரு பட்டியல் தயார் செய்து அதில் அச்சம் தரும் விஷயங்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். பொதுவாக எழுதாமல் குறிப்பிட்டு எழுத வேண்டும் உதாரணமாக ‘பேசுவதற்கு நான் பயப்படுகிறேன்’ என்று எழுதுவதற்குப் பதிலாக எந்த இடத்தில் பேசுவதற்கு பயப்படுகிறீர்கள் என்று எழுதலாம். மேடைப் பேச்சு அல்லது நண்பர்களுடன் பேசுவது, புதியவர்களுடன் பேசுவது கூட்டத்தில் பேசுவது போன்றவற்றில் எதில் ஒருவருக்கு பயம் என்பது பற்றிய தெளிவு வேண்டும். 

2. காரணம்;

எதனால் அந்த பயம் ஏற்பட்டது என்பதை பற்றிய காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். அதைப்பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டும். அதற்கு தன்னைத்தானே ஒருவர் மிகவும் புரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு உயரத்தை பார்த்தால் பயம் ஏற்படும். எப்போது, எதனால் அந்த பயம் ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய வேண்டும். ஒரு நிபுணருடன் கலந்தாலோசிப்பது பயத்தை குறைக்க உதவும். அவர் அதை சமாளிக்கும் நுட்பங்களை வழங்குவார். 

3. படிப்படியாக எதிர்கொள்ளுதல்; 

பயத்தை தவிர்க்காமல் அதை படிப்படியாக எதிர்கொள்ள வேண்டும். இதற்கு எக்ஸ்போஷர் தெரப்பி என்று பெயர். உதாரணமாக மேடைப்பேச்சில் பயம் இருந்தால் முதலில் கண்ணாடி முன் நின்று பேசிப் பழகவேண்டும். பின்பு வீட்டில் உள்ள நபர்களுடன் பேசுதல், நண்பர்கள் குழுவில் பேசுதல், சிறிய கூட்டத்தில் பேசுதல் என்று படிப்படியாக முயற்சி செய்தால் கடைசியில் மேடைப்பேச்சு பற்றிய பயம் அறவே அகன்று விடும். நாளடைவில் மேடைப் பேச்சில் சிறந்து விளங்க முடியும்.

4. தளர்வு நுட்பங்கள்;


பயத்தை எதிர்கொள்ளும்போது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அது மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும். நான்கு எண்ணி ஆழமாக மூச்சை உள் இழுக்க வேண்டும். நான்கு எண்ணி அதை உள்ளே வைத்து பின்பு நான்கு எண்ணி சுவாசத்தை வெளியே விட வேண்டும்.

5. மைண்ட் ஃபுல்னஸ் மற்றும் தியானம்;


தற்போதைய தருணத்தில் வாழவேண்டும். ஒவ்வொரு செயலையும் அனுபவிக்க ரசித்து செய்ய வேண்டும். மற்றும் தியானப்பயிற்சியும் கவலை பயம் போன்ற எதிர்மறை உணர்வுகளை நன்றாகக் குறைக்க உதவுகிறது. 

6. வெற்றியை காட்சிப்படுத்தல்; 

பயத்தை வெற்றிகரமாக சமாளிக்க காட்சிப்படுத்துதல் நன்றாக உதவும். மன ஒத்திகை கவலையை குறைத்து பயத்தை அகற்றி நன்றாக செயல்பட வைக்கும். மேடையில் ஏறி கூட்டத்தினர் முன்பு அருமையாக, சிறப்பான சொற்பொழிவு ஆற்றுவது போல கற்பனையில் படமாக ஓட்டி பார்க்க வேண்டும். மேலும் நேர்மறையான உறுதிமொழிகளை பயன்படுத்த வேண்டும். ‘’நான் மிகத் திறமையானவன். என்னால் இதை சிறப்பாக கையாள முடியும் போன்ற சொற்றொடர்கள் ஒருவரை மேம்படுத்தும். 


7. மறுவடிவமைப்பு; 

சாத்தியமான எதிர்மறை விளைவுகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக பயத்தை சமாளித்துக் கொண்டு நேர்மறையான சாத்தியக்கூறுகளைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும். அவற்றை நன்றாக மறு வடிவமைப்பு செய்வது அவசியம்.

8. வெற்றிகளைக் கொண்டாடுதல்;

சிறிய முன்னேற்றத்தை கவனித்து அவற்றை ஒரு நோட்டில் குறித்து வைக்க வேண்டும். பயம் ஏற்படும்போது அதை எடுத்துப் பார்த்தால் மனதிற்கு தைரியமும் துணிச்சலும் ஏற்படும். சிறிய வெற்றிகளைக் கூட கொண்டாட வேண்டும். இந்த எட்டு வழிமுறைகளும் அச்சங்களை எதிர்கொண்டு அவற்றை அகற்ற உதவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...